Police Recruitment

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், அங்காடிகளில் மக்கள் அதிகம் கூடுவதால் மக்கள் கூடும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.