Police Department News

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மார்கெட் மூடப்பட்டது,கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நடவடிகககை

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மார்கெட் மூடப்பட்டது,கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நடவடிகககை

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல் வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டுவரும் மலர் மார்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் மார்கெட் மூடப்படுகிறது. கொரோனா 3 அலையை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.எஸ். அனீஸ்சேகர் IAS. அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.