Police Recruitment

மண்டபம் அருகே ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளுடன் இலங்கை அகதி கைது!

இலங்கை மன்னார் மாவட்டம் பதினாறாம்கட்டை சித்திரை குமார் மகன் முரளிதரன் (எ) அருண் (24). அகதியாக தமிழகம் வந்த அருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவரது உறவினரை சந்திக்க இன்று காலை வந்த இவர், மண்டபம் அருகே சுடுகாடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் , அருணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் இருந்த ரூ. 1லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.