Police Department News

வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது;

வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது;

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் மருந்து விற்பனையாளர்கள் மற்றும் மெடிக்கல் உரிமையாளர்களோடு அறிவுரை கூட்டம் நடைபெற்றது

பெண்களுக்கு குழந்தைப் பேறு காலத்தின் போது அறுவை சிகிச்சைக்கு பின் பயன்படுத்தக்கூடிய சில வழி மாத்திரைகளை சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர் இதனை தடுக்கும் பொருட்டு வடசென்னை பகுதிக்குட்பட்ட மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாத்திரைகளின் விற்பனையாளர்களை அழைத்து வடக்கு மண்டல துணை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது

இதில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர் ராணி ஆகியோர், தலைமையில் கூட்டம் நடைபெற்றது

அப்பொழுது பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ராணி கூறுகையில் வழி மாத்திரைகளாக பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை சிலர் தவறாக போதை பொருளாக பயன்படுத்தி வருவதாகவும், அதனை தடுக்கும் பொருட்டு மெடிக்கல் உரிமையாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட சில மாத்திரைகளை டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் வழங்கக்கூடாது என்றும் மீறி வாடிக்கையாக பயன்படுத்தம் நபர்களை கண்டறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் வாடிக்கையாக வாங்கக்கூடிய நபர்களிடம் முகவரியைப் பெற்றுக் கொண்டு மட்டுமே மாத்திரைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்

துணை ஆணையாளர் சிவபிரசாத் கூறுகையில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையாளர் அறிவுறுத்தலின் பெயரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில தினங்களாக வடசென்னையில் சோதனையிட்டபோது போதை மாத்திரைகளை விற்பனை செய்த 20 பேரை கைது செய்து இருப்பதாகவும் அவர்களிடமிருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். இருபத்தி மூன்று ரூபாய் விற்கக்கூடிய வலி மாத்திரைகளை சில இடைத்தரகர்கள் ஒரு மாத்திரை 300 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் அதனைத் தடுக்கும் பொருட்டும் மெடிக்கல் உரிமையாளர்கள் மாத்திரைகளை நேரடியாக மாத்திரை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்றும் மாத்திரைகளை இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்

போதை மாத்திரைகளை விற்பனை செய்த 20 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.