Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்

2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு தூத்துக்கு மாவட்டத்தில், தூத்துக்குடி நகர உட் கோட்டத்தில் மாரிமுத்து, பரமசிவம் ஆகிய இரண்டு பேரும் ஊரக உட்கோட்டத்தில் வெங்கடாஜலப்பெருமாள், தரண்யா, மற்றும் மேகலா, ஆகிய 3 பேரும் மணியாச்சி உட்கோட்டத்தில், சுப்புராஜ், சுந்தர், சந்தன மாரி,சுகந்தி,மற்றும் பிரம்மநாயகம் ஆகிய 5 பேரும் கோவில்பட்டி உட்கோட்டத்தில் ரத்தினவேல் பாண்டியன், முகில் அரசன், சுப்பிரமணியன், ராகவி மற்றும் ஜெபா ஆகிய 5 பேரும் விளாத்திகுளம்உட் கோட்டத்தில் சண்முகராஜ், ரவிகுமார், கோவிந்தராஜ், சண்முகம், முத்துக்குமார். பாமா, அனுசியா, மற்றும் செல்வராஜ் ஆகிய 8 பேரும் ஶ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் விக்னேஷ், பரமசிவம், மஞ்சு, செல்வக்குமார், அஜித், மாரியப்பன், மாரியம்மாள், ஜூடித் கிருபா, ஜெயஜோதி, வெங்கடேஷ், குரு, கிருத்திகா, மாடசாமி மற்றும் ரவிச்சந்திரன், ஆகிய 13 பேரும் திருச்செந்தூர் உட்கோட்டத்தில் சுதாகர், முத்தமிழ்அரசன், முகமது, ரபீக். மற்றும் ஆரோக்கியஜென்சி, ஆகிய 4 பேரும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் வசந்தி, மற்றும் ஐசக், பாக்கியநாதன், ஆகிய 2 பேரும் என மொத்தம் 42 பேர் தேர்வாகியுள்ளனர். மேற்படி 42 பேரும் 25/8/21 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரடி உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் காவல்துறையில் பணியாற்றுவது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு உன்னதமான பணியாகும் நீங்கள் நல்லா பழக்க வழக்கங்களை கடைபிடித்து பொது மக்களுக்கு முன்மாதியாக இருக்க வேண்டும். அதே போன்று பொதுமக்களுக்கு உதவுவதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் அனைவரிடமும் அனைவரிடமும் ஒற்றுமையை கடைபிடித்து நேர்மையாகவும் சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பணியிலும் சொந்த வாழ்க்கையிலும் குறிப்பிட்ட நேரத்தை காலம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பயிற்சியை நல்ல முறையில் பயின்று சிறந்த உதவி ஆய்வாளராக திகழ வேண்டும். பணியுடன் உங்கள் குடும்பத்தின் மேலும் அக்கரை செலுத்த வேண்டும்.உங்கள் உடல் நலத்தையும் ஆரோக்கியத்துடன் பேணி பாது காக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேற்படி தேர்வு செய்யப்பட்ட 42 உதவி ஆய்வாளர்கள் வரும் 1 ம் தேதி அன்று சென்னையில் உள்ள காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்கு செல்ல இருக்கிறார்கள்.

இந்நிகழ்சியில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி, தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், சைபர் கூற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் திரு. சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, மற்றும் உதவியாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.