Police Department News

சண்டையிட்டவர்களை சமதானம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு சுப்பரமணியபுரம் போலீசார் விசரணை

சண்டையிட்டவர்களை சமதானம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு சுப்பரமணியபுரம் போலீசார் விசரணை

மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2 வது தெருவில் வசிப்பவர் உமர் மகன் அசரப்அலி வயது 31/21, இவருக்கு செய்யதலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், மேலும் சில நேரங்களில் சமையல் வேலையும் செய்து வந்தார். இவர் கடந்த 14 ம் தேதி மதியம், அய்யாதுரை சமையல் மாஸ்டர் கடையில் சூர்யா, மாரி, மூர்த்தி மற்றும் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை சத்தம் போட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார், அதன்பின் மதியம் சுமார் 2.45 மணியளவில் நடராஜா தியேட்டர் வாசலில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது முன் பின் தெரியாத நேரில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் வந்து நாங்கள் சண்டை போட்டால் உனக்கென்ன எங்களை விலக்கி விடும் அளவுக்கு நீ பெரிய ரவுடியா? உன்னை வெட்டி கொன்றால்தான் என்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள் என கூறிக் கொண்டே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து வெட்டியுள்ளார், இதனால் படுகாயமடைந்த அசரப்அலியை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அதன்பின் தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் C2 , காவல் நிலைய போலீசார் சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு முகமது இத்திரீஸ் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.