Police Department News

மதுரை, திருநகர் பகுதியில் வயிற்று வலியின் காரணமாக தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை, திருநகர் பகுதியில் வயிற்று வலியின் காரணமாக தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை திருநகர் W1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான விளாச்சேரி வேளாளர் தெருவில் வசித்து வருபவர் கருப்பையா மகன் பந்தலுடையார் வயது 59/2021, இவர் தனது வீட்டறுகே பொம்மை செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார் இவரது மனைவி சந்திரவதனம் வயது 56/2021, இவர் கடந்த 2 வருடமாக கழுத்து வலி, மற்றும் வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார், இவர் கடந்த 17 ம் தேதி மாலை 3.30 மணியளவில் வயிற்று வலியுடன் படுத்திருந்தார் கணவர் அருகேயுள்ள ATM க்கு சென்று வந்து பார்த்தபோது அவர்கள் நடத்தி வரும் பொம்மை கம்பெனியில் தனக்கு தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் கணவர் வந்து நேரில் பார்த்து விட்டு திருநகர் W1, காவல் நிலையத்தில் சட்டப்படி விசாரணை செய்து தங்களின் குல வழக்கப்படி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கும்படி புகார் மனு அளித்தார், மனுவை பெற்றுக்கொண்ட நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.