![](http://policeenews.com/wp-content/uploads/2021/11/Images1533864576.jpg)
மன நலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் திரிந்த நபரை கடையநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனகராஜ் அவர்கள் தலைமை காவலர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மேலும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அரக்கட்டளையை சேர்ந்த சேக் உசேன் மற்றும் நீட் பார் சர்வீஸ் நிறுவனர் கோபி ஆகியோர் இணைந்து மன நலம் பாதிக்கப்பட்ட நபரை அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷன் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர். காவல்துறை மற்றும் தன்னார்வலர்களின் இந்த மனிதநேயமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
![](http://policeenews.com/wp-content/uploads/2021/11/Screenshot_20210920-193209_Photo-Par-Tamil-Likhe-1-1-612x1024.jpg)