தனது தாய், தந்தையரை பிரிந்து தவித்த இரண்டு வயது பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்கு வரத்து காவலர்
மதுரை தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்களின் கீழ் பணிபுரியும் முதல்நிலை காவலர் திரு.திருப்பதி அவர்கள் மதுரை நேதாஜி ரோட்டில் பணியில் இருந்த போது அங்கே பெற்றோரை பிரிந்த இரண்டு வயது பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அவருடன் பணியில் இருந்த திரு. ஆதிபாண்டி அவர்கள் இருவரும் அந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுத்து தங்கள் வசம்வைத்துக் கொண்டு பெற்றோரை தேடி வந்தனர் அவர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அந்த குழந்தையின் பெற்றோர், தனக்கன் குளத்தை சேர்ந்த சுந்தர், சுகன்யா தம்பதியரை கண்டுபிடித்து அவர்கள் வசம் குழந்தை ரோஜாஶ்ரீயை ஒப்படைத்தனர் . தங்களின் குழந்தையை கண்டுபிடித்து கொடுத்த போக்குவரத்து காவலர்கள் திரு. திருப்பதி, மற்றும் ஆதிப்பாண்டியை மனமாற வாழ்த்தினர்.
குழந்தையை காவலர்கள் விரைந்து கண்டுபிடித்த செய்தி கிடைத்தவுடன் நமது செய்தியாளர் திரு. குமரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புகைப்படங்களை எடுத்து செய்திக்கு உதவினார். அவருக்கு நன்றி