Police Department News

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார்

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் பொன்மணி வயது ( 26 ) அவருடைய கணவர் பெயர் பால்பாண்டி இவர்களுக்கு ராம்சரண் மற்றும் சர்வேஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் .
கடந்த 4 .10 .21 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை பொன்மணி தனது இரண்டாவது மகன் சர்வேசுடன் கடைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக காரியாபட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :-
காரியாபட்டி காவல் ஆய்வாளர்- 9498188883,

சார்பு ஆய்வாளர் 9498184936 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.