Police Department News

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது.

மதுரை சிலைமான் காவல் நிலைய சரகம் கல்மேடு பகுதியில் வசித்து வரும் பெண் (அந்த சிறுமியின் தாய்) என்பவருடைய மகள் 8 வயது சிறுமி அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரது கணவர் ஹோட்டலில் வேலை செய்து வருவதாகவும், தனது மகள் அருகில் உள்ள டீயூசன் டீச்சரிடம் தினமும் படிக்க செல்வதாகவும், டீச்சர் ஒருநாள் சிறுமியிடம் எதார்த்தமாக, யாராவது உங்களிடம் தவறுதலாக நடந்து கொள்கிறார்களா? என டியூசன் டீச்சர் கேட்டதற்கு பாதிக்கப்பட்ட சிறுமி அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக தனது டியூசன் டீச்சரிடம் கூறியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த மேற்படி நபர் மீது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த மணிகண்டன்,46/22 இந்திராநகர், கல்மேட்டை சேர்ந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

மேலும் அந்த நபர் அங்கு டியூசன் பயிலும் மேலும் மூன்று சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளும் மேற்படி நபரின் பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்துள்ளனர் இதுபோல் சிறுமிகளிடம் தவறாக நடந்து பாலியல் தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.