Police Department News

பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில்
F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (சட்டம் ஒழுங்கு)அவர்களால் கைது செய்யப்பட்டனர்.


பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில்
F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (சட்டம் ஒழுங்கு)அவர்களால் கைது செய்யப்பட்டனர்.

F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2022) மாலை, சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வந்த 1.அல்ஜமீர், வ/27, த/பெ.அபிபுல்லா, பச்சையப்பன் தெரு. எல்லிஸ் ரோடு. திருவல்லிக்கேணி, 2.அஜித், வ/22, த/பெ.கோவிந்தராஜ், பெரிய தெரு. கணபதி தெரு, திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர்.கஞ்சாவை விட அதிக மயக்கத்தில் வைக்கும் இந்த மாத்திரைகளால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மற்றும் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் உடலில் போதை ஏற்றப்பட்டு சென்னையில் பல திருட்டு ,கொலை,கொள்ளை போன்ற சம்பவங்களை செய்யத் தூண்டும் மோசமான போதை மாத்திரை ஆகும்.இந்த கடத்தல் கும்பலின் தலைவன் குற்றவாளி அல்ஜமீர் என்பது குறிப்பிடத்தக்கது .
அவர்களிடமிருந்து 600 நைட்ரவிட் உடல் வலி மாத்திரைகள் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூபாய் 20000 காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.