Police Department News

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர்

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர்

திருச்சி லால்குடி அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ‘மாரத்தான்’ ஓட்டத்தில், திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் பங்கேற்று, 10 கி.மீ., ஓடினார்.திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.பள்ளி முன்பிருந்து மாரத்தான் ஓட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், மாணவ, மாணவியர் மற்றும் ஆர்வலர்களுடன் சேர்ந்து, மாரத்தான் போட்டி இலக்கான 10 கி.மீ., ஓடினார்.மாரத்தான் ஆர்வலர்களை வழி நெடுகிலும், பொது மக்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.