Police Department News

மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை

மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

நேற்று வேலைக்கு சென்ற பொன்மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் பொண்மணி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொன்மணியின் உடலை கைப்பற்றி உடற் கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சமயநல்லூர் சரக டி.எஸ்.பி. பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.