Police Department News

மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு

மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு

மதுரை சமயநல்லூர் வளர்நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அங்குள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக உள்ளார் இவரது மனைவி பூர்ணிமாதேவி வயது 32/22,

இவர் மதுரை முடக்கு சாலையில் உள்ள அகாடமி ஒன்றில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பூர்ணிமாதேவி சம்ப வத்தன்று இரவு திருமங்கலம் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தார் அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது.

சமயநல்லூர் வைகையாற்று பாலம் அருகே பூர்ணிமாதேவி நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பூர்ணிமாதேவியை வழி மறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்

இது தொடர்பாக பூர்ணிமா தேவி சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.