Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பணம்-பொருட்கள் திருட்டு

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பணம்-பொருட்கள் திருட்டு

மதுரை அருகே கடையின் ஓட்டை பிரித்து பணம்-பொருட்கள் திருடு போயின.
டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் ஜெய்ஹிந்த்புரம் நல்லமுத்து காலனியில் சாணை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மர்ம நபர்கள் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, 10 பிளேட்டுகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளை அடித்தது எந்த கும்பல்? என்று தெரியவில்லை.

சாணை கடைக்கு டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் மாரியப்பன், சர்வீஸ் மைதீன் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.