Police Department News

மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது

மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது

மதுரை புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அவர் காந்திபுர கண்மாய் கரையில் ரோந்து சென்ற போது அங்கே 4 பேர் வாளுடன் பதுங்கி இருந்ததை கண்டு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கடச்சனேந்தல் அய்யனார் காலனி சரவணன் என்ற கோளாறு சரவணன் வயது 26/22, புதூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த கனேசன் என்ற மென்டல் கனேசன் காந்திபுரம் சதீஷ் வயது 23/22, காந்திபுரம் 4 வது தெருவை சேர்ந்த பிரகாஷ் என்ற பல்லு பிரகாஷ் வயது 22/22, என்பது தெரிய வந்தது. அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் ஒவ்வொருவரிடமும் வாள் இருந்தது.அந்த 4 வாள்களையும் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.