Police Department News

பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

தர்மபுரி மதுவிலக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதியில் சென்றபோது, மூசன் கொட்டாய் என்ற கிராமத்தில் உள்ள 2 தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த தோட்டங்களில் சோதனை செய்தபோது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடையே 5 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அந்த கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததோடு அந்த தோட்டத்தின் உரிமையாளர்களான சங்கநாதன் மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.