Police Department News

பொய்யான உரிமையியல் பிரச்சினையில் விரைவில் தீர்வு காண்பது எப்படி?

பொய்யான உரிமையியல் பிரச்சினையில் விரைவில் தீர்வு காண்பது எப்படி?

இரண்டு நபர்கள் ஓர் இடத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள் எனில் அவர்களில் யார் பெயரில் அந்த இடத்திற்குரிய பத்திரம் அல்லது பட்டா போன்ற ஆவணங்கள் இருக்கிறது என்பதை சரி பார்த்தாலே வழக்கு பிரச்சினை முடிந்து விட்டது.

ஒரு வேளை இரண்டு நபர்களும் அவரவர்கள் பெயரில் சான்றாவணம் வைத்திருந்தால் அது ஒன்று அவர்களில் ஒருவரால் போலியாக தயாரிக்கப்பட்டது அல்லது அவர்களில் ஒருவரால் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து போலியாக பெறப்பட்டது என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.

போலியானதா என்பதைக் கண்டு பிடிக்க ஒன்று தடைய அறிவியல் துறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது இது தொடர்பாக அரசின் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களைக் கொண்டு வரச்செய்து ஆய்வு செய்தால் தெரிந்து விட போகிறது. இதை கண்டுபிடிக்க எதுக்கு பல ஆண்டுகள். இப்படி கண்டு பிடிக்கப்பட்ட பின் யாருக்கு உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்புச் செய்வதோடு சரி.

போலியான ஆவணத்தை தயாரித்ததன் மூலம் அல்லது லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு போலியான ஆவணத்தை உருவாக்கி தந்த அரசு ஊழியரை போலி ஆவணம் தயாரித்த குற்றத்திற்கான தண்டனை பெற்று தந்தால் தானே தவறான உரிமை வழக்கை கொண்டு வருபவர்களுக்கு பயம் வரும்.

Leave a Reply

Your email address will not be published.