Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது

மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.

அங்கு 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியி ருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் தத்தனேரி, பாரதிநகர் சசிகுமார் (30), முனியாண்டி கோவில் தெரு முட்டக்கண் மகாராஜன் (23), அகிம்சாபுரம் மதன்கு மார்(27), ஓடக்கரை, முத்துராமலிங்கம் தெரு கஞ்சிமுட்டி ஜெயபாண்டி ( 33), தத்தனேரி, சிவகாமி நகர் கிடாரி கார்த்திக்(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published.