Police Department News

மாரண்டஅள்ளி அருகே
மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

மாரண்டஅள்ளி அருகே
மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்லுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவன். இவருடைய மனைவி குப்பம்மாள் (வயது 70). இந்த நிலையில் குப்பம்மாள் வெளியில் சென்று விட்டார். சிவன் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் வெளியில் சென்ற குப்பம்மாள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப் பட்டிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.