Police Department News

பாலக்கோட்டில் மனைவி தொடர்ந்த பிரபல வழக்கில் சொத்துக்கள்
குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு .

பாலக்கோட்டில் மனைவி தொடர்ந்த பிரபல வழக்கில் சொத்துக்கள்
குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர்குளிரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன் மகன் சிவராஜ் (47) இவரது மனைவி லதா (38), இவர்களுக்கு 2 பெண் 1 ஆண் குழந்தைகள் உள்ளது.
இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்,
இவரிடம் கடன் வாங்கும் பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பதுடன் செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தார்.
இவரின் செயல்பாடுகள் பிடிக்காத அவரது மனைவி லதா (38) தர்மபுரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவகாரத்து பெற்றார்.
மேலும் மனைவி மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு செலவிற்காக 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் சிவராஜ் ஜீவனம்சம் தராததால் அவரது மனைவி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி சிவராஜ் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விட்டு ஜீவனம்சம் வழங்க வருவாய் துறையினருக்கு உத்தவிட்டர்,
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களில் ஆலோசனைப்படி தாசில்தார் ராஜா, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வி.ஏ.ஒ குமரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் சிவராஜிக்கு சொந்தமான 5 ஏக்கர் 40 சென்ட் நிலம் மற்றும் வீட்டை ஜப்தி செய்து அறிவிப்பு பலகை வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.