Police Department News

மாரண்டஅள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி இறந்தார்.

மாரண்டஅள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி இறந்தார்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது50). மரம் ஏறும் தொழிலாளி. இவர் ராசிக்குட்டை கிராமத்தில் முத்து என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் அங்குள்ள கோழிப்பண்ணையில் கோழிக்கு ஊற்றும் மருந்தை (விஷம்) தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.