
கஞ்சா வழக்கில் இருவர் கைது
மதுரை செல்லூர் எஸ்ஐ ஆதிராஜா தலைமையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் ஹரி வயது 22 என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர் இதே போல் திடீர் நகர் எஸ்ஐ அஜய்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனை செய்த பழங்காநத்தம் சேர்ந்த ராஜாமணி மகன் ஆரோக்கியராஜ் வயது 40 என்பவரை கைது செய்தனர் இவர்களிடம் இருந்த கஞ்சா செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
