Police Department News

காரிமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து 13 ஆண்டுகளாக தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீராத வயிற்று வலி உள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ரவி வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.