Police Department News

ரயிலில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

ரயிலில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

ரயிலில் பயணம் செய்வதற்கும் சில விதிகள் உள்ளன. ஒவ்வொரு பயணிகளும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விதிகள் சில உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ரயில்வேயின் ஒரு முக்கியமான விதியைப் பற்றி இங்கு காணலாம். இந்த விதியின் கீழ், ரயில்வேயில் சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுடன் யாராவது சென்றால், ரயில்வே சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் இந்த பொருட்களை கொண்டு பயணிக்க முடியாது. இதில் கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், விளக்குகள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் லைட்டர்களும் அடங்கும். யாரேனும் இந்த பொருட்களை வைத்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் இந்தப் பொருட்களைக் கொண்டு பயணம் செய்வது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது.

ரயில்வே சட்டம் 1989-ன் கீழ், 67, 154,164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ், ரயிலில் எரியக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிப் பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயிலில் யாரேனும் இந்த பொருட்களை வைத்திருந்தால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published.