Police Department News

வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார்.

இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், இளவரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.