Police Department News

விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை

விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் மகேஸ்(28). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜூக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பாக்கியராஜ் கேரளாவிற்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோமதிக்கு போனில் தெரிவித்தனர். உடனடியாக கோமதி மகள் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.பாக்கியராஜ் குடும்பத்தார் தெரிவித்த தகவல்களில் கோமதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகள் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.