Police Department News

பெல்ரம்பட்டியில் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை .

பெல்ரம்பட்டியில் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை .

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (வயது .26) இவரது மனைவி கவி பிரியா இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரனமாக கனவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் கவிபிரியா கோபித்து கொண்டு நார்த்தம்பட்டியில் உள்ள அம்மா வீட்டிற்க்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார், மனைவி வர மறுத்ததால் விரக்தியில் இருந்த மணிகண்டன் நேற்றிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொன்டர் .
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.