Police Department News

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி மாயாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது மகன் அமல்ராஜ்(வயது 48). இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டில் 16 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த அமல்ராஜ், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

உடனே அமல்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.