Police Recruitment

பெண்களிடம் நகை பறிப்பு

பெண்களிடம் நகை பறிப்பு

மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சித்ரா (40). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சித்ரா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூர் முனியாண்டி கோவில் தெரு 3-வது தெரு போஸ் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வசந்தி (58). இவர் செல்லூர் 50 அடி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.