Police Recruitment

பென்னாகரம் அருகே பெண்ணிடம் தவறாக முயன்ற டிரைவர் கைது

பென்னாகரம் அருகே பெண்ணிடம் தவறாக முயன்ற டிரைவர் கைது

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா (வயது29) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார். வீட்டில் ரஞ்சிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரஞ்சிதா வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜின் மகன் சந்தோஷ் (26) என்பவர் திடீரென்று வீட்டின் சுவரை ஏறி குதித்து, தூங்கி கொண்டிருந்த ரஞ்சிதாவின் அறைக்குள் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் ரஞ்சிதா சத்தம்போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். இதனை பார்த்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ரஞ்சிதா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.