Police Recruitment

இந்தியாவின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும் முன்னாள் ராணுவ பிரிகேடியர் வேண்டுகோள்

இந்தியாவின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும் முன்னாள் ராணுவ பிரிகேடியர் வேண்டுகோள்

தருமபுரி அடுத்த உங்கரான அள்ளி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு கேப்டன் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் மதன், முருகன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை வழங்கினார். வேப்பாடி ஆறுமுகம் கருத்துரை வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் பிரிகேடியர் சிவராமன் கலந்து கொண்டு பேசுகை யில் முன்னாள் ராணுவ வீரர்கள் எப்படி யெல்லாம் இருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவை இன்னும் வலிமையான இந்தியாவாக மாற்றிட இளைஞர்கள் முன் வர வேண்டும்.

நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் கூட ஒரே தேசம் என ஒற்று மையுடன் இருக்க வேண்டும் என பேசினார்.

விழாவின் தருமபுரியில் முன்னாள் படை வீரர் களுக்கென மருத்துவ மனைக்கான இடம் வேண்டும். இதே போல ராணுவ கேன்டீனுக்கு சொந்த இடம் வழங்க வேண்டும்.முன்னாள் படை வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி வேண்டும் என முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரி க்கைகள் வைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தரை, கப்பல் மற்றும் வான் படை வீரர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழா முடிவில் கேப்டன் நாகராஜன் நன்றி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.