Police Recruitment

அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.
3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல்

அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.
3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
அவரது உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது அமானிமல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் துரை (வயது. 42), ராஜா (வயது.46) முருகன் (வயது. 47), வேலன் (வயது. 38) என்பதும் அனைவரும் அமானிமல்லாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்தது,
அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்களையும். 3 மோட்டார் சைக்கிள் மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.