Police Recruitment

கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது.

கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
இதையடுத்து இன்று காலை போலீசார் கிராமபுற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரகூர் பகுதியில் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்,
அவரை பிடித்து விசாரித்ததில் கரகூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது .50) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்து அவரிடமிருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.