Police Recruitment

மூதாட்டி-வாலிபர் தற்கொலை

மூதாட்டி-வாலிபர் தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது80). இவருடைய பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மூதாட்டி மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் திருப்பதிகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்
மதுரை பரசுராம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (45). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அதில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி வசந்தா திருப்பாலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.