கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
நேற்று தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் இளந்திரையன் அவர்கள் இணைய வழிக் குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவற்றின் நன்மைகள் தீமைகள் பற்றியும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு. பாண்டியராஜா மற்றும் 200 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.