Police Department News

மிட்டாநூலஅள்ளி அருகே
கோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி.

மிட்டாநூலஅள்ளி அருகே
கோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி.

நல்லம்பள்ளி,செப்.17: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சின்னநூல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் கோவிந்தன் (எ)கண்ணுபையன்(70).விவசாயி. இவர் வளர்த்து வந்த கோழி ஒன்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் நேற்று இரவு தவறி விழுந்துள்ளது.அதனை மீட்பதற்காக முதியவர் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி முதியவரை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் முதியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்து வந்த கோழி கிணற்றில் விழுந்ததை காப்பாற்ற இறங்கிய முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.