Police Department News

மதுரை கொட்டாம்பட்டியில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

மதுரை கொட்டாம்பட்டியில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி கிராமம். இங்குள்ள சிங்கம்புணரி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு 5க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
அதே பகுதியை சேர்ந்த சுபீப் உலாகான் என்பவர் வணிக வளாக கட்டிடத்தில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் இரும்பு கம்பியால் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் பலசரக்கு பொருட்களை திருடினர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவை அந்த கும்பல் சேதப்படுத்தியது. தொடர்ந்து அருகில் இருந்த ஜவுளிக்கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியது. அதே வளாகத்தில் மேலும் 2 கடைகளிலும் கொள்ளை கும்பல் புகுந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பியது. இன்று அதிகாலை கடை திறக்க வந்த சுபீப் உலாகான் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடி க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல் அருகில் இருந்த கடையின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.