Police Department News

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 மதுரை தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 மதுரை தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நான்கு சக்கர வாகன பேரணி நடத்தினர். இது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி கே.கே. நகர் ஆர்ச்.. அரவிந்த் மருத்துவ மனை கணேஷ் தியேட்டர் சந்திப்பு தெப்பக்குளம் முக்திஸ்வரர் கோயில் அருகில் நிறைவு பெற்றது.

போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. குமார் அவர்கள் பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார் மற்றும் துணை ஆணையர் திரு. குமார் அவர்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் கூடுதல் துணை ஆணையர்.. போக்குவரத்து உதவி ஆணையர்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.