Police Department News

முத்துநகர் ரயில் மீது கல் வீச்சு, கண்ணாடி உடைப்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை

முத்துநகர் ரயில் மீது கல் வீச்சு, கண்ணாடி உடைப்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மக்கும்பல் கல் வீசியதில் கண்ணாடி சேதமடைந்தது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டது தூத்துக்குடி மேலூரை அடுத்த சின்னக்கண்ணுபுரம் அருகே சென்ற போது மர்ம நபர்கள் ரயிலில் ஏ.சி.,பெட்டி மீது கல் வீச்சில் ஈடுபட்டனர் இதில் கண்ணாடி சேதமடைந்தது பயணிகள் யாருக்கும் காயமில்லை அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது

ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்து விசாரித்தனர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த வந்தே பாரத் ரயில் மீது கங்கைகொண்டான் அருகே ஒரு கும்பல் கல் வீசியது தொடர்ந்து ரயில்கள் மீது நடக்கும் கல் வீச்சு சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீசார் மாணவர்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.