Police Department News

ஒசூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை பெற்றோரே அடித்துக்கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை பெற்றோரே அடித்துக்கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி, முத்தாலியை சேர்ந்த 23 வயது சிவாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி சிறுமியை வீட்டை விட்டு சிவா அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சிறுமியை மீட்ட போலீசார், சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன் தொடர்ந்து சிறுமி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊருக்கு அருகே உள்ள ஏரியில் உடலில் காயங்களுடன் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் சிறுமியின் பெற்றோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மகளை கட்டில் காலால் தலையில் அடித்து கொன்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்து சென்று ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து பெற்றோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பெரியம்மாவையும் போலீசார் கைது செய்தனர். பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.