Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

22:03:2024 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த வேடசந்தூர், பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (21) என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.ஆரோக்கிய செல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 22.03.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மனோஜ்குமார் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.