போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய், 2000 அபராதமும் பெற்று தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
04.04.2024 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கன்னிவாடி பகுதி சேர்ந்த அம்சராஜன்(54) என்பவரை போக்சோ வழக்கில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்கள், நீதிமன்ற முதன்மை காவலர் திருமதி. கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 04.04.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி அம்ச ராஜன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.