Police Department News

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

04.04.2024 திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப்படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கொடி அணிவகுப்பு பேகம்பூர் பகுதியில் துவங்கி யானைத்தெப்பம், R.V நகர், முத்தழகுப்பட்டி, செல்லாண்டியம்மன் கோவில் தெரு வழியாக சென்று நகர் தெற்கு காவல் நிலையத்தில் முடிவடைந்தது. மேலும் நிலக்கோட்டை மற்றும் பழனியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப்படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.