Police Recruitment

மதுரையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தவர் கைது

மதுரையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தவர் கைது

மதுரை K. புதூரை சேர்ந்தவர் சங்கர் வயது (41) இவர் தல்லாகுளத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் கோகலே சாலையில் உள்ள கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மூன்று பேர் கத்தியை காட்டி சங்கரை மிரட்டி அவரிடமிருந்து ரூ,1300 ரொக்கத்தை பறித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில் ஐராவதநல்லூரை சேர்ந்த பாலா வயது (29) ஜவகர் புறத்தைச் சேர்ந்த கனகராஜ் வயது (31) பாண்டியன் நகரைச் சேர்ந்த சக்திவேல் முருகன் வயது (27) ஆகியோர் பணம் பறித்து தப்பியது தெரிந்தது.அவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.