Police Recruitment

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கடந்த 08:9:2021 ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். விசாரணை முடிவில் பாலகிருஷ்ணனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25000 அபராதம் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். என்றும் அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.