Police Department News

மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது

மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது

மதுரையில் மூதாட்டியை தாக்கியதாக ஜோதிடர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை நாகுப் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் மீனா வயது (51) இவர் கீரை துறை பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது கடைக்கு பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமியிடம் ஜோதிடம் குறி பார்க்க வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு கணவர் இல்லாததால் வேறு ஒருவருடன் சேர்த்து வைப்பதாக கூறியதால் அங்கிருந்து வந்துவிட்டதாகவும் கூறினார்.அப்போது அங்கு வந்த மலைச்சாமி மற்றும் இருவர் அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றானராம். இதைப் பார்த்த மீனா அந்த பெண்ணை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பாக தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மலைச்சாமி உள்ளிட்ட மூவரும் மீனாவையும் இவரது கணவர் கிருஷ்ணனையும் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இதுகுறித்து கீரை துறை போலீசார் வழக்கு பதிந்து மலைச்சாமி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். தப்பிச்சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.