Police Department News

குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது

மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற ராஜா வயது (23) இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இதே போல் மதுரை கீரை துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது (19) கொலை வழக்கில் சிக்கிய இவரும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார்.சம்பந்தப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் ஜே.லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.