Police Department News

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த திருப்புல்லாணி பகுதியை சோ்ந்த சரத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரது கூட்டாளிகளான கோகுல் மற்றும் ஒரிசா மாநிலத்தை சோ்ந்த சக்திகுமார் ஆகிய இருவரையும் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுதீர்லால் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அழகன்குளம் இறால் பண்ணையில் வைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 3.160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, கடல் அட்டைகள் மற்றும் இதர போதைப்பொருட்கள் கடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படும் எனவும், போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.,IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.